செவ்வாய், 21 டிசம்பர், 2010

காவலர்களும் மனித நேயமும்

காவலர்கள் என்றாலே மனித நேயமற்றவர்கள் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள இந்த பதிவை வெளியிடுகிறேன்.காவலர்களும் மனித நேயம் உள்ளவர்கள் என்பதை இந்த புகைப்படங்களை பார்த்தால் தெரிந்துவிடும்.இந்த புகைப்படங்கள் தினமலர் பத்திரிக்கையின் வலை தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.


திங்கள், 13 டிசம்பர், 2010

தமிழக மக்களுக்காக

தமிழகத்தின் துணை முதல்வர் தமிழகத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் செய்துள்ள காரியம் இது.பகுத்தறிவு பகலவனின் புதல்வரின் ஆசி வாங்கும் நிகழ்வு இது.சமீபத்தில் நடந்த புட்டபர்த்தி சாய்பாபாவின் பிறந்த நாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.தந்தையைப் போல் இல்லாமல் ஸ்டாலினாவது இந்துக்களின் மனதைப் புண்படுத்தாமல் இருக்கிறாரே.அதுவரைக்கும் சந்தோசமே.இந்த புகைப்படம் பெரும்பாலான தமிழகப் பத்திரிக்கைகளில் வெளியிடப்படாமல் உள்ளது.எதற்காக தெரியுமா சிறுபாண்மையினரின் ஓட்டு கிடைக்காமல் போய்விடுமே.

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

மத சார்பற்ற கருணாநிதியா?

தமிழகத்தின் விடிவெள்ளியான முதல்வருமான பழுத்த பகுத்தறிவுவாதியுமான டாக்டர் என்று அழைக்கப்படும் கலைஞர் கருணாநிதி அவர்கள் மதசார்பற்றவரா?
            இந்துக்களை பழிப்பதும் அழிப்பதும் முதல் கடமையாக வைத்து இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. இந்து மதத்தில் இல்லாத எந்த நல்ல கருத்தை கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதத்தில் கண்டுவிட்டார் என்றும் தெரியவில்லை. இந்துக்கள் பண்டிகைக்கு ஒரு வாழ்த்து அறிக்கை கூட விடாதவர் டிசம்பர் மாதம் சென்னையில் நடக்கும் கிறிஸ்தவ விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்.இதற்கு காரணம் என்ன? கிறிஸ்தவர்களின் ஓட்டு வ்ங்கியா? இல்லை கிறிஸ்தவ மதத்தின் மீது இருக்கும் பற்றா? விடை தெரிந்த்தவர்கள் தயவு செய்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
                              

ராசாவிற்கு இது சோதனைக் காலம்


முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சரான ராசாவிற்கு இது சோதனையான காலம் போன்று தெரிகிறது. சி.பி.ஐ அவரது வீட்டிற்கு சோதனை நடத்த சென்றதிலிருந்தே நமக்கு புரிகிறது. பெரியோர் சொல்லும் பழமொழி போன்று பல நாள் கள்ளன் ஒரு நாள் அகப்படுவான். இவரது தலைவரான கலைஞர் கருணாநிதியும் விரைவில் மக்களிடம் மாட்டிக் கொள்வார்.சி.பி.ஐ நடத்திய சோதனை விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இரண்டு திருடர்களும் சேர்ந்து இருப்பதைப் பாருங்கள்.

திங்கள், 6 டிசம்பர், 2010

வேலன்: வேலன்- இணையத்தை அளவறிந்து பயன்படுத்த

நான் வேலன் சாரின் தீவிர ரசிகன்.அவரது பதிவை பார்க்காமல் வேறு எந்த தளமும் பார்ப்பது இல்லை.அவரது பதிவினை இங்கே பதிவிடுகிறேன்
வேலன்: வேலன்- இணையத்தை அளவறிந்து பயன்படுத்த

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

கன்னியாகுமரி மாவட்டம்

இது நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் வரைபடம். இதில் பெயர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் ஊர் பெயர்கள் உள்ள வரை படம் கிடைத்தால் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சனி, 4 டிசம்பர், 2010

சாமியே சரணம் ஐயப்பா


   இது கார்த்திகை மாதம் .உலகெங்கும் உள்ள இந்துக்கள் எல்லோரும் விரதமிருந்து அய்யனை தரிசிக்க செல்லும் நேரமிது. அய்யனை தரிசித்து எனது  எழுத்துப் பணியினை துவங்க உள்ளேன்.எல்லோரும் தரிசிக்க சில அய்யன் புகைப் படங்கள் இங்கே வெளியிட்டுள்ளேன்.